குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

"இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடல்" 2023-ல் குடியரசு துணைத் தலைவர் முக்கிய உரையாற்றினார்

Posted On: 15 NOV 2023 3:46PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற "இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடலின்" 2023 -ல் சிறப்புரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக, இந்தியா சுதந்திரமான மற்றும் அமைதியான ஆட்சி அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை விரும்புகிறது என்று கூறினார்.

உலகளாவிய அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒரு நிலையான காரணியாக இந்தியா ஒரு முன்னணி பொருளாதாரமாக உருவெடுத்ததை விவரித்த குடியரசுத் துணைத் தலைவர், உலகளாவிய ஒழுங்கை உறுதிப்படுத்த நாம் முன்னணியில் இருந்து வழிநடத்துவதை உறுதி செய்ய இந்தியா ஒரு முக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான நாடாக பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கைக் கொண்ட இந்தியா, ஐ.நா. பாதுகாப்புக் குழுமத்தில் நியாயமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என்றும், இது நிச்சயமாக இந்த உலகளாவிய அமைப்பின் செயல்திறனைக் குறைக்கிறது என்றும் அவர்து உரையில் தனது வேதனையையும் வெளிப்படுத்தினார். அதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் வலியுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், ட்ரோன்கள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் போன்ற சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், இந்தக் களங்களின் திறமை மற்றும் தேர்ச்சி ஆகியவை எதிர்காலத்தின் உத்தி சார்ந்த தேவைகள் மற்றும் இல்லாதவற்றைத் தீர்மானிக்கும் என்று கூறினார். இது தொடர்பாக, இந்திய பெரு நிறுவனங்கள் துறை, சிவில் மற்றும் ராணுவப் படைகளுடன் ஒன்றிணைந்து, மேற்கத்திய நாடுகளில் செய்வது போல இதுபோன்ற தொழில்நுட்பங்களை உருவாக்க பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"இந்தியாவின் பொருளாதார வலிமை வளரும்போது, உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்களில் நமது பங்குகளும் சவால்களும் அதிகரிக்கின்றன" என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே ஒரு தயார்நிலை, மறுமலர்ச்சி மற்றும் பொருத்தமான பங்குதாரராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்த பிராந்தியத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான உத்தியை உருவாக்க அழைப்பு விடுத்தார்.

அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது என்று குறிப்பிட்ட திரு தங்கர், இவற்றின் மூலம் உருவாக்கப்படும் செல்வம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில நபர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் போது, கேப்டன் ஹிமாத்ரி தாஸ் எழுதிய "கடல்சார் பாதுகாப்புக்கான இந்தியா மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு" என்ற புத்தகத்தையும் குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், தேசிய கடல்சார் அறக்கட்டளையின் தலைவர் துணை அட்மிரல் பிரதீப் சவுகான், தேசிய கடல்சார் அறக்கட்டளையின் தலைமை இயக்குநர் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

*****

ANU/PKV/IR/RR/KPG



(Release ID: 1977128) Visitor Counter : 80


Read this release in: English , Urdu , Hindi , Marathi