பாதுகாப்பு அமைச்சகம்

கிழக்குக் கடற்படையின் தலைமைப் பொறுப்பை ரியர் அட்மிரல் திரு ராஜேஷ் தன்கர் ஏற்றுள்ளார்

Posted On: 11 NOV 2023 5:26PM by PIB Chennai

ரியர் அட்மிரல் திரு ராஜேஷ் தன்கர், 10 நவம்பர் 2023 அன்று கிழக்குக் கடற்படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விசாகப்பட்டினத்தில் நடந்த விழாவில் அவர் பொறுப்பேற்றார்.

ராஜேஷ் தன்கர் 01 ஜூலை 1990 அன்று இந்திய கடற்படையில் பணியில் இணைந்தார். கப்பல் செலுத்தல் மற்றும் இயக்கத்தில் அவர் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.  33 ஆண்டுகால கடற்படைப் பணி அனுபவத்தில் அவர் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்த 11 மாதங்களாக, ரியர் அட்மிரல் திரு குர்சரண் சிங்கின் தலைமையின் கீழ், கிழக்கு கடற்படை செயல்பட்டு வந்தது. அவர் ஓய்வு பெற்றதை அடுத்து திரு ராஜேஷ் தன்கர் அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

****  

PKV/PLM/DL



(Release ID: 1976403) Visitor Counter : 114


Read this release in: English , Urdu , Marathi , Hindi