பாதுகாப்பு அமைச்சகம்

மூன்றாவது ஏவுகணை மற்றும் வெடிமருந்து (எம்.சி.ஏ) படகு அறிமுகம்

Posted On: 23 SEP 2023 11:29AM by PIB Chennai

ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரியில் உள்ள குட்டேனாதேவியில் வெள்ளிக்கிழமையன்று மூன்றாவது ஏவுகணை மற்றும் வெடிமருந்து (எம்.சி.ஏ) படகு , யார்டு 77 -ல் (எல்.எஸ்.ஏ.எம் 9) போர்க்கப்பல் தயாரிப்பு மேற்பார்வையாளர் (விசாகப்பட்டினம்) சிஎம்டிஇ ஜி.ரவியால் தொடங்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் "மேக் இன் இந்தியா" முன்முயற்சிகளுக்கு பெருமை அளிக்கும் வகையில் இந்த படகில் அனைத்து முக்கிய மற்றும் துணை உபகரணங்கள் / அமைப்புகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசின் "ஆத்மநிர்பார் பாரத்" முன்முயற்சிகளுக்கு இணங்க, விசாகப்பட்டினத்தில் உள்ள செகான் இன்ஜினியரிங் புராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஏவுகணை மற்றும் வெடிமருந்து (எம்.சி.ஏ) படகு  கட்டுமானம் மற்றும் விநியோகத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

***

ANU/SM/BS/DL



(Release ID: 1959883) Visitor Counter : 123


Read this release in: English , Marathi , Urdu , Hindi