பிரதமர் அலுவலகம்

மராத்வாடா விடுதலை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

Posted On: 17 SEP 2023 8:16PM by PIB Chennai

மராத்வாடா விடுதலை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த அனைவரின் அசைக்க முடியாத ஈடுபாட்டையும், துணிச்சலையும் அவர் நினைவு கூர்ந்தார்.

 எக்ஸ் சமூக ஊடகப் பதிவில்  பிரதமர் கூறியிருப்பதாவது;

"மராத்வாடா விடுதலை தின வாழ்த்துகள். விடுதலைப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த அனைவரின் அசைக்க முடியாத உத்வேகத்தையும், வீரத்தையும் மராத்வாடா நினைவு கூர்கிறது. இந்த மண்ணின் மீதும் இங்குள்ள மக்களுடனும்  கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பு வரலாற்றுப் பாதைக்கு வழிகாட்டியது. அவர்களின் துணிச்சலும், தியாகமும் எங்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது’’

******

AD/ANU/PKV/KRS



(Release ID: 1958319) Visitor Counter : 137