பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியர் டாக்டர் யஷ்பால் சிங்குக்கு தேசிய ஆசிரியர் விருது – 2023 வழங்கப்பட்டது

Posted On: 06 SEP 2023 6:21PM by PIB Chennai

தேசிய ஆசிரியர் விருது - 2023 பெற்ற ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியர் டாக்டர் யஷ்பால் சிங்கை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா இன்று பாராட்டினார். மத்தியப்பிரதேசத்தின் போபாலில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி முதல்வர் டாக்டர் யஷ்பால் சிங், மூன்று கட்ட ஆன்லைன் செயல்முறைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 மிகவும் திறமையான ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார்.

இவ்விழாவில், திரு முண்டா, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி ஆசிரியர் நான்காவது முறையாக தேசிய விருது பெற்றிருப்பதைக் காண்பது பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்திற்கு பெருமை மிக்க தருணம் என்று குறிப்பிட்டார்.  அவர் ஆற்றிய முன்மாதிரியானப் பணி மற்ற பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் சிறந்த பாதையில் செல்ல ஊக்குவிக்கும்" என்றார்.

 

டாக்டர் யஷ்பால் சிங், போபாலில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியின் நிலையை உயர்த்துவதற்கும், பள்ளியின் பெயரை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்வதன் மூலம், தொழில் மீதான தனது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை நிரூபித்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

தொலைதூரப் பகுதிகளில் உள்ள பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகள் உயர் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் வாய்ப்புகளைப் பெறுவதற்கும், பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கும் ஏதுவாக தரமானக் கல்வியை வழங்குவதற்காக 1997-98 ஆம் ஆண்டில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

 

******



(Release ID: 1955238)

ANU/AD/IR/KPG/KRS



(Release ID: 1955289) Visitor Counter : 98