சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

தேசிய நீதித்துறை தரவு தொகுப்பு : மின் நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் ஆன்லைன் தளமாக உருவாக்கப்பட்ட உத்தரவுகள், தீர்ப்புகள் மற்றும் வழக்கு விவரங்களின் தரவுத்தளம்.

Posted On: 23 AUG 2023 3:23PM by PIB Chennai

தேசிய நீதித்துறை தரவு தொகுப்பு (என்.ஜே.டி.ஜி) என்பது 18,735 மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களின் உத்தரவுகள், தீர்ப்புகள் மற்றும் வழக்கு விவரங்களின் தரவுத்தளமாகும். இணைக்கப்பட்ட மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களால் நிகழ்நேர அடிப்படையில் தரவுகள் புதுப்பிக்கப்படுகின்றன. இது நாட்டின் அனைத்து கணினிமயமாக்கப்பட்ட மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களின் நீதித்துறை நடவடிக்கைகள் / முடிவுகள் தொடர்பான தரவுகளை வழங்குகிறது. அனைத்து உயர் நீதிமன்றங்களும் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பில் (என்.ஜே.டி.ஜி) இணைய சேவைகள் மூலம் இணைந்துள்ளன, இது வழக்கு தொடுக்கும் பொதுமக்களுக்கு எளிதாக அணுகும் வசதியை வழங்குகிறது.

எலாஸ்டிக் தேடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இ-கோர்ட்ஸ் சேவைகள் தளத்தின் மூலம், தற்போது 23.58 கோடிக்கும் அதிகமான வழக்குகள் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட நீதிமன்றங்கள் தொடர்பான 22.56 கோடிக்கும் மேற்பட்ட உத்தரவுகள் / தீர்ப்புகள் தொடர்பான வழக்கு நிலை தகவல்களை மனுதாரர்கள் பெற முடியும். சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கான வழக்கு தரவுகள் என்.ஜே.டி.ஜி.யில் கிடைக்கின்றன, வழக்கின் வயது மற்றும் மாநிலம் மற்றும் மாவட்டத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யும் திறன் உள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் காணவும், நிர்வகிக்கவும், குறைக்கவும் என்.ஜே.டி.ஜி ஒரு கண்காணிப்பு கருவியாக செயல்படுகிறது.  வழக்குகளை முடிப்பதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்க கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு சரியான நேரத்தில் உள்ளீடுகளை வழங்கவும், வழக்கு நிலுவையைக் குறைக்கவும் இது உதவுகிறது. இது நீதிமன்ற செயல்திறன் மற்றும் அமைப்பு ரீதியான தடைகளை சிறப்பாக கண்காணிக்க உதவுகிறது, இதனால், ஒரு திறமையான வள மேலாண்மை கருவியாக செயல்படுகிறது. நிலத் தகராறுகள் தொடர்பான வழக்குகளைக் கண்காணிக்க, 26 மாநிலங்களின் நில ஆவணங்கள் தரவுகள் என்.ஜே.டி.ஜி உடன் இணைக்கப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டிற்கான வணிகம் செய்வதை எளிதாக்கும் அறிக்கையில் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பை உலக வங்கி பாராட்டியது, இது வழக்கு மேலாண்மை அறிக்கைகளை உருவாக்குவதை சாத்தியமாக்கியது, இதன் மூலம் ஒப்பந்தங்களை செயல்படுத்துவதை எளிதாக்கியது. இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய தரவு பகிர்வு மற்றும் அணுகல் கொள்கைக்கு (என்.டி.எஸ்.ஏ.பி) இணங்க, துறை ரீதியான ஐடி மற்றும் அணுகல் விசையைப் பயன்படுத்தி என்.ஜே.டி.ஜி தரவை எளிதாக அணுக அனுமதிக்கும் வகையில் திறந்த பயன்பாட்டு நிரலாக்க அமைப்பு,  மத்திய மற்றும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நிறுவன வழக்குரைஞர்கள் தங்கள் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக என்.ஜே.டி.ஜி தரவை அணுக அனுமதிக்கும். எதிர்காலத்தில் இந்த வசதியை நிறுவனம் சாரா வழக்குதாரர்களுக்கும் விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

***



(Release ID: 1951440) Visitor Counter : 128


Read this release in: English , Urdu , Hindi