பாதுகாப்பு அமைச்சகம்

"எனது மண், எனது தேசம் இயக்கம்"

Posted On: 16 AUG 2023 7:02PM by PIB Chennai

சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், விடுதலையின் அமிர்தப் பெருவிழா மக்கள் தலைமையிலான முன்னெடுப்பாக கொண்டாடப்படுகிறது. விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக மத்திய அரசு எனது மண் எனது தேசம் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது. 2023 ஆகஸ்ட் 09 முதல் 15 வரை டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு விமானப்படை நிலையங்களில் கருப்பொருளுக்கு ஏற்ப பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த விமானப்படை நிலையங்களில் 75 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. அத்துடன் 5 உறுதிமொழிகளையும் அங்கிருந்த அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

அர்ஜன்கர் விமானப்படை தளத்தில், ஆயாநகரில் உள்ள பாபா மங்கள் தாஸ் பூங்காவில் 'அம்ரித் வாடிகா' உருவாக்கப்பட்டது. ஹிண்டன் விமானப்படை நிலையத்திற்கு அருகிலுள்ள போவாப்பூர் என்ற கிராமத்தில், 'அம்ரித் சரோவரை' சுற்றி 'அம்ரித் வாடிகா' உருவாக்கப்பட்டது.

பாலம் விமானப்படை நிலையம் அருகில் உள்ள இந்தோ கொரிய நட்புறவு பூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 15 ஆகஸ்ட் 2023 அன்று நமது நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வணக்கம் என்பதன் ஒரு பகுதியாக கௌரவிக்கப்பட்டனர். முப்படைகள், மத்திய, மாநில காவல் துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.

அந்தந்த காவல் நிலைய பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், உள்ளூர் மற்றும் கிராமத்து மக்கள் முழு மனதுடன் பங்கேற்றதால், நிகழ்ச்சிகள் பெரும் வெற்றி பெற்றன.

***

(Release ID: 1949631)

AD/ANU/IR/RS/KRS



(Release ID: 1949686) Visitor Counter : 187


Read this release in: Hindi , Urdu , English