ஆயுஷ்

பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் முதலாவது உலகளாவிய உச்சி மாநாடு குஜராத்தின் காந்திநகரில் நடைபெறுகிறது

Posted On: 16 AUG 2023 6:14PM by PIB Chennai

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை 2023 ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் குஜராத்தின் காந்திநகரில் இரண்டு நாள் பாரம்பரிய மருத்துவம் குறித்து உலகளாவிய உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. பாரம்பரிய மருத்துவம் குறித்த முதலாவது உலகளாவிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா இன்று குஜராத்தின் காந்திநகரில் செய்தியாளர்களிடம் பேசினார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் திரு லாவ் அகர்வாலும் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார நிறுவனத்தால் நிறுவப்பட்ட பாரம்பரிய மருந்துகள் குறித்த சர்வதேச மையம், வளரும் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள முதல் மையம் என்று மத்திய ஆயுஷ் செயலாளர் எடுத்துரைத்தார். ஆயுஷ் அமைச்சகம் இணைந்து நடத்தும் பாரம்பரிய மருத்துவ உலகளாவிய உச்சிமாநாட்டை உலக சுகாதார அமைப்பு 2023 ஆகஸ்ட்  17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காந்திநகரில் நடத்தும் என்றும், இது முக்கியமான சுகாதார சவால்களை எதிர்கொள்வதிலும், உலகளாவிய சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சியில் முன்னேற்றத்தை முன்னெடுப்பதிலும் பாரம்பரிய ஒருங்கிணைந்த மருத்துவத்தின் பங்கை கண்டறியும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஆயுஷில் முழுமையான சுகாதாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.டி.கோடேச்சா, பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த பணிகள் பல தளங்களில் பல்வேறு கோணங்களில் நடந்து வருகின்றன என்றார்.

 

இந்த இரண்டு நாள் நிகழ்வில் 30 நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இது 90 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், கல்வியாளர்களின் புகழ்பெற்ற உறுப்பினர்கள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பாரம்பரிய மருத்துவத் துறையைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க வீரர்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சுகாதாரத் துறை மற்றும் அதன் முன்னேற்றம், அது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதன் தற்போதைய முன்னுரிமைகள் பற்றிய கண்ணோட்டத்தை திரு லாவ் அகர்வால் வழங்கினார். தற்போதைய ஜி 20 தலைவராக இந்தியா இருப்பதால், சுகாதாரத்தில் நாட்டின் வலிமையை எடுத்துரைத்த அவர், உலகளாவிய சுகாதாரத் துறையில் அதன் பங்களிப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதற்கான முயற்சிகளை வலியுறுத்தினார்.

உலக சுகாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை திரு லாவ் அகர்வால் பாராட்டினார். உலகின் தொலைதூரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பல யோகா மையங்கள், அவற்றின் சுகாதாரத்தை மேம்படுத்தினார். நவீன மற்றும் ஆயுஷ் மருத்துவத்தின் மூலம் முழுமையான சுகாதாரமே இந்தியாவின் அணுகுமுறை என்று அவர் கூறினார்.

*** 

ANU/AD/IR/RS/KRS



(Release ID: 1949649) Visitor Counter : 171