சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

Posted On: 11 AUG 2023 2:11PM by PIB Chennai

தேசிய மக்கள்தொகைக் கொள்கை -2000 மற்றும் தேசிய சுகாதாரக் கொள்கை -2017 ஆகியவற்றின் கோட்பாடுகளின்படி, தேசிய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.

அரசு எடுத்த நடவடிக்கைகள்:

  1. விரிவாக்கப்பட்ட கருத்தடை விருப்பத்தேர்வுகள்: ஒருங்கிணைந்த வாய்வழி கருத்தடை மாத்திரைகள், அவசரகால கருத்தடை மாத்திரைகள், கருப்பை கருத்தடை சாதனம் (ஐ.யூ.சி.டி) மற்றும் கருத்தடை ஆகியவற்றை உள்ளடக்கிய தற்போதைய கருத்தடை முறைகள் மற்றும் புதிய கருத்தடை நடைமுறைகளான  ஊசி மூலமான நடைமுறைகளும் ஊக்குவிக்கப்படுகிறது.
  1. கருத்தடை சாதனங்கள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளை பெறுவதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்க மிஷன் பரிவார் விகாஸ் திட்டம் பதின்மூன்று மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது.
  2. கருத்தடை செய்துகொள்வதற்கான  இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ஊதிய இழப்பு வழங்கப்படுகிறது.
  3. பிரசவத்திற்குப் பிந்தைய கருத்தடை சாதனம் (பிபிஐயுசிடி), கருக்கலைப்பிற்குப் பிந்தைய கருப்பை கருத்தடை சாதனம் (பிஏயுசிடி) மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய கருத்தடை (பிபிஎஸ்) ஆகிய நடைமுறைகளும் செயல்படுத்தப்படுகிறது.
  4. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் சேவை வழங்கல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் 'உலக மக்கள் தொகை தினம் மற்றும் வாஸெக்டோமி இருவார நிகழ்ச்சிகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
  5. வீட்டுக்கே கருத்தடை சாதனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆஷா பணியாளர்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று கருத்தடை சாதனங்களை வழங்குகின்றனர்.
  6. அனைத்து நிலை சுகாதார நிலையங்களிலும் குடும்பக் கட்டுப்பாடு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக குடும்பக் கட்டுப்பாட்டு மேலாண்மை தகவல் அமைப்பு (எஃப்.பி-எல்.எம்.ஐ.எஸ்) நடைமுறையில் உள்ளது.

மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றி கண்டுள்ளதுடன், பின்வரும் முன்னேற்றங்களும் அடையப்பட்டுள்ளது.

  • மொத்த கருவுறுதல் விகிதம் 2015-16 ஆம் ஆண்டில் 2.2 ஆக இருந்தது 2019-21 ஆம் ஆண்டில் 2.0 ஆக குறைந்துள்ளது.
  • 2015-16 ஆம் ஆண்டில் 47.8 சதவீதமாக இருந்தநவீன கருத்தடை பயன்பாடு 2019-21 ஆம் ஆண்டில் 56.5 சதவீதமாக உயர்ந்துள்ளது
  • 2015-16 ஆம் ஆண்டில் 12.9 சதவீதமாக இருந்த குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளாதவர்களின் விகிதம் 2019-21ஆம் ஆண்டில் 9.4 சதவீதமாக குறைந்துள்ளது.
  • கடந்த 2015-ம் ஆண்டு 20.8 ஆக இருந்தபிறப்பு விகிதம்2020-ம் ஆண்டில் 19.5 ஆக குறைந்துள்ளது.

மக்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் திரு எஸ்.பி.சிங் பாகெல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

*****

 

AP/ANU/PLM/RS/KPG

 



(Release ID: 1947918) Visitor Counter : 136


Read this release in: English , Urdu , Telugu