சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

நலிவடைந்த பிரிவினருக்கு சட்ட சேவைகள்

Posted On: 28 JUL 2023 5:14PM by PIB Chennai

பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு நீதி கிடைக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பொருளாதார அல்லது பிற சிக்கல்கள் காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சட்டப் பிரிவு 12 இன் கீழ் வரும் பயனாளிகள் உட்பட சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச மற்றும் திறன் வாய்ந்த சட்ட சேவைகளை வழங்குவதற்காக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சம வாய்ப்புகளின் அடிப்படையில் நீதி வழங்குவதை உறுதி செய்வதற்காக லோக் அதாலத்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இதற்காக, தாலுகா நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை, சட்ட சேவை நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டப்பணிகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களில் சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள் அடங்கும்.

நீதியை விரைவாகவும், சமமாகவும் அணுகுவதற்காக, தேசிய சட்ட சேவைகள் ஆணையம் சட்ட சேவைகள் தொடர்பான மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், "இந்தியாவில் நீதிக்கான முழுமையான அணுகலுக்கான புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல்" என்ற தலைப்பிலான ஒரு திட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இது  தொலைதூர சட்ட சேவைகள் மூலம் வழக்குக்கு முந்தைய ஆலோசனையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

*****

 

ANU/PLM/KRS

 


(Release ID: 1943837) Visitor Counter : 101


Read this release in: English , Urdu , Punjabi