நிதி அமைச்சகம்

ராஜஸ்தானில் நகர்ப்புற சேவைகளை விரிவுபடுத்த 200 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளன

Posted On: 28 JUL 2023 2:37PM by PIB Chennai

குடி நீர் வழங்கல் நடைமுறைகளை விரிவுபடுத்தவும் சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நகர்ப்புற மீட்சித் திறன் மற்றும் பாரம்பரிய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நடந்து வரும் ராஜஸ்தான் இரண்டாம் நிலை நகரங்கள் மேம்பாட்டுத் துறை திட்டத்திற்கு கூடுதல் நிதியாக 200 மில்லியன் டாலர் கடன் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் (ஏடிபி) இன்று கையெழுத்திட்டன.

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் திரு உம்லுன்மங் உல்னம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கான ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய இயக்குநர் டகோ கோனிஷி ஆகியோர் கடன் இந்தக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், இரண்டாம் நிலை நகரங்களில் அடிப்படை உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் குறைக்க இந்தக் கூடுதல் நிதி உதவும் என்று திரு உல்னம் கூறினார்.

அடிப்படை நகர்ப்புற சேவைகளை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு புதுமையான மற்றும் பருவநிலைத் தீர்வுகளை இந்த திட்டம் உள்ளட்கியுள்ளது என்று திரு கோனிஷி கூறினார்.

*****

ANU/PLM/KRS

 


(Release ID: 1943827) Visitor Counter : 97


Read this release in: English , Urdu , Hindi , Telugu