வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஏற்றுமதி மதிப்புகளின் அடிப்படையில் உலக உணவு தானிய சந்தையில் இந்தியாவின் பங்கு 2022 ஆம் ஆண்டில் 7.79% ஆக உள்ளது

கடந்த சில ஆண்டுகளில் நிலையான வளர்ச்சி காணப்பட்டது; 2010ல் 3.38 சதவீதமாக இருந்தது

Posted On: 21 JUL 2023 6:18PM by PIB Chennai

2022 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் உலக உணவு தானிய சந்தையில் இந்தியாவின் பங்கு 7.79% ஆகும் (ஆதாரம்: ஐ.நா காம்டிரேடு மற்றும் ஐ.டி.சி புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஐ.டி.சி வர்த்தக வரைபட கணக்கீடுகள்).

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் உணவு தானியங்களின் ஏற்றுமதி நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது உலக உணவு தானிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 2010 ஆம் ஆண்டில் 3.38 சதவீதத்திலிருந்து 2022 ஆம் ஆண்டில் 7.79 சதவீதமாக உயர்ந்ததில் பிரதிபலிக்கிறது.  ஏற்றுமதி ஊக்குவிப்பு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். உணவு தானியங்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மாநில/ மாவட்ட அளவில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அளவிலான செயல்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மாநில அளவிலான கண்காணிப்புக் குழுக்கள், வேளாண் ஏற்றுமதிக்கான ஒருங்கிணைப்பு முகமைகள் மற்றும் தொகுப்பு அளவிலான குழுக்கள் பல மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதியை ஊக்குவிக்க நாடு மற்றும் தயாரிப்பு சார்ந்த செயல் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

வணிகத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பான வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் "அபெடாவின் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம்" என்ற திட்டத்தின் கீழ் ஏற்றுமதி உள்கட்டமைப்பு மேம்பாடு, தர மேம்பாடு , சந்தை மேம்பாடு போன்ற கூறுகளின் கீழ் உணவு தானியங்கள் உள்ளிட்ட வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. வாங்குபவர்-விற்பவர் சந்திப்புகளை (பி.எஸ்.எம்) ஏற்பாடு செய்வதன் மூலம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் ஏற்றுமதியாளர்களுக்கு அபெடா உதவுகிறது; சர்வதேச வர்த்தக கண்காட்சிகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்பு; சுகாதார மற்றும் பைட்டோசானிட்டரி (எஸ்.பி.எஸ்), வர்த்தகத்திற்கான தொழில்நுட்ப தடைகள் (டி.பி.டி) மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகளுடன் சந்தை அணுகல் பிரச்சினைகளை எடுத்துக்கொள்வது;  பல்வேறு நாடுகளில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியத் தூதரகங்களுடன் வழக்கமான தொடர்புகள் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், அரிசி மற்றும் ஊட்டச்சத்து தானியங்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு மன்றங்கள் (ஈபிஎஃப்) அபெடாவின் மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. இந்த  உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொடர்பான முன்னேற்றங்களை அடையாளம் காணவும், எதிர்பார்க்கவும், ஏற்றுமதியின் முழு உற்பத்தி / விநியோக சங்கிலியில் உள்ள பங்குதாரர்களை அணுகவும், ஏற்றுமதியை ஊக்குவிக்க தேவையான கொள்கை தலையீடுகள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்கவும் ஈபிஎஃப்கள் முயற்சிக்கின்றன.

வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலில் கூட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (எஃப்பிஓ) நிறுவப்பட்டுள்ளன. இது சராசரி உற்பத்தி செலவைக் குறைக்க உதவுகிறது, இதனால் வெளிநாட்டு சந்தைகளில் போட்டித்தன்மை அதிகரிக்கிறது.

இத்தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

-----

(Release ID: 1941490)

ANU/PKV/KRS



(Release ID: 1941606) Visitor Counter : 172


Read this release in: English , Urdu , Marathi