ஆயுஷ்

பாரம்பரிய மருந்துகள் குறித்த இந்தியா - ஆசியான் மாநாடு புதுதில்லியில் இன்று நடைபெற்றது

Posted On: 20 JUL 2023 6:12PM by PIB Chennai
  • அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஆசியான் இந்திய தூதரகத்துடன் இணைந்து பாரம்பரிய மருந்துகள் குறித்த இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) ஆகியவற்றின் மாநாட்டை புதுதில்லியில் இன்று ஏற்பாடு செய்தது. நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பை அடைய நிலையான மற்றும் நெகிழ்வான சுகாதார அமைப்புகளை ஒருங்கிணைப்பதாக உறுதியளித்தது.

 

இந்த மாநாட்டில் மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் மற்றும் ஆயுஷ் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டாக்டர் முஞ்பாரா மகேந்திரபாய் கலுபாய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஆயுஷ் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா, பிற பிரமுகர்கள் மற்றும் ஆசியான் நாடுகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஆசியான் நாடுகள் உட்பட மொத்தம் 75 பிரதிநிதிகள் மெய்நிகர் முறையில் பங்கேற்ற இந்த மதிப்புமிக்க மாநாட்டின் ஒரு பகுதியாக இருந்தனர்.

 

இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய மருத்துவம் குறித்த மாநாடு நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான பாரம்பரிய மருத்துவ முறைகளின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து விவாதிக்கவும், பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து வியூகம் வகுக்கவும் ஒரு தளத்தை வழங்குகிறது என்று திரு சர்பானந்தா சோனோவால் தனது தலைமை உரையில் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா வசுதைவ குடும்பகம் கொள்கையை நம்புகிறது. "ஒரே ஆரோக்கியம்" என்ற இலக்கை அடைவதில் பாரம்பரிய மருத்துவ முறைகள் பெரும் பங்கு வகிக்க அதிக ஆற்றலைக் கொண்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

 

ஆசியான் பொதுச் செயலாளர் டாக்டர் காவ் கிம் ஹவர்னும் வீடியோ செய்தி மூலம் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளின் உணர்வுகளை அவர் விளக்கினார்.. பாரம்பரிய மருந்துகள் மூலம் பொது சுகாதாரத்தில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஆசியான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கும் மூன்று முக்கிய அம்சங்களை பொதுச் செயலாளர் எடுத்துரைத்தார்.

 

பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியாவும் ஆசியானும் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை எடுத்துரைத்த டாக்டர் முஞ்பாரா மகேந்திரபாய் காலுபாய், "மூலிகை வைத்தியம், முழுமையான அணுகுமுறைகள் மற்றும் ஆயுர்வேதம் போன்ற கலாச்சார நடைமுறைகளின் அடிப்படையில் ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் அல்லது ஆயுர்வேதத்தை அடிப்படையாகக் கொண்ட வளமான பாரம்பரிய சிகிச்சை முறைகளை இந்தியாவும் ஆசியானும் கொண்டுள்ளன" என்று கூறினார்.

 

ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்ட சிறுதானியங்களின் நன்மைகளை வலியுறுத்திய அவர், அன்றாட வாழ்க்கையில் அதன் பயன்பாட்டிற்கு பயனளிக்கிறது, "உடலுக்கு தேவையான தாதுக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பிற பொருட்களை உயிர் வடிவில் வழங்குவதில் சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, மக்களின் பிராந்திய விருப்பத்திற்கு ஏற்ப சிறுதானியங்கள் தினசரி உணவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

 

மதிப்பிற்குரிய விருந்தினர்கள், பிரமுகர்கள் மற்றும் பிரதிநிதிகளை வரவேற்று, ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா தனது தொடக்க உரையில்,"இந்த மாநாடு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் அறிவு பரிமாற்றத்தை வளர்ப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. சிந்தனையைத் தூண்டும் விவாதங்கள், மற்றும் அறிவியல் விளக்கக்காட்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம், இது ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்பு உணர்வை ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டார்.

 

----
 

(Release ID: 1941127)

IR/KPG/KRS

 

 

 



(Release ID: 1941260) Visitor Counter : 159


Read this release in: English , Urdu , Hindi