நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க சிறப்பு ஏற்பாடுகள்

Posted On: 05 APR 2023 5:29PM by PIB Chennai

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ல் இடம் பெற்றுள்ள பிரிவுகளின்படி,  கிராமப்புறங்களில் 75 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 50 சதவீதம் பேரும் மானிய விலையில், உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.   தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு அந்த்யோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை குடும்பங்கள் என்ற பிரிவுகளின் கீழ், உணவு தானியங்களை வழங்குவதற்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை ஒதுக்கீடு செய்கிறது.

நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை  வழங்கப்படும் இந்த உணவு தானியங்களை வயது முதிர்வு (65 வயதுக்கு மேல்), உடல் ரீதியான குறைபாடுகள் உள்ளவர்கள் உணவு தானியங்களைப் பெறுவதற்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறப்படுவதைக் கருத்தில் கொண்டு, இத்தகையவர்களுக்கு உணவு தானியங்களை சிறப்பு வழிமுறைகளைக் கையாண்டு வழங்குமாறு 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தத் துறை  அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஒதுக்கீட்டு உணவு தானியங்களை வீடுகளுக்கு நேரடி விநியோகம் செய்வது, பயனாளிகளின் அங்கீகாரம் பெற்றவர்கள் மூலம் உணவுப் பொருட்களை விநியோகிப்பது ஆகிய வழிமுறைகளைக் கையாளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மக்களவையில், மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து மூலம் அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்.

------

AP/PKV/KPG

 



(Release ID: 1914007) Visitor Counter : 122


Read this release in: English , Urdu