சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மத்திய சாலைப்போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்தின் பொறுப்பு முகமைகள் தொடர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்கின்றன

Posted On: 29 MAR 2023 3:04PM by PIB Chennai

சாலை விபத்துக்கள் தொடர்பான தகவல்களை  அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்து மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் தொடர்பாக  ஆண்டு தகவல் அறிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  தற்போது 2021ம் ஆண்டு வரையிலான விபத்துகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு  மற்றும் பராமரிப்புக்கு அடிப்படையில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பொறுப்பு வகித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் தரம் தொடர்பாக, அரசு தொடர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலைப்போக்குவரத்து அமைச்சகத்தின் சம்பந்தப்பட்ட முகமைகள், தொடர்ச்சியாக ஆய்வுகளை  மேற்கொள்கிறது. தரமற்ற பணிகள் கண்டறியப்பட்டால், அதை மாற்றியமைக்க ஒப்பந்ததாரர்களுக்கு  உத்தரவிடப்படுகிறது. இதனைத்தொடர்ந்தும், குறைகள் கண்டறியப்பட்டால், ஒப்பந்தத்தின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்தப் பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 

***

AD/PLM/RS/KPG



(Release ID: 1911862) Visitor Counter : 105


Read this release in: English , Urdu , Gujarati , Telugu