பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கர்ப்பிணிப் பெண்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்கான திட்டம்

Posted On: 17 MAR 2023 4:17PM by PIB Chennai

மத்திய அரசு  ஊட்டச்சத்து 2.0 இயக்கத்திற்கு (ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து உதவித் திட்டம்) 15-வது நிதி ஆணையத்தின்  (2021-22 முதல் 2025-26 வரையில்) கீழ் ஒப்புதல் அளித்துள்ளது.

 நாடு முழுவதிலும் உள்ள 13.97 லட்சம் அங்கன்வாடி மையங்கள் மூலமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு  காலை சிற்றுண்டி,  சூடான மதிய உணவு மற்றும் வீட்டிற்கு எடுத்துச்செல்லும் ரேஷன் (பச்சரிசி அல்ல) பொருட்கள்  வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கூடுதல் ஊட்டச்சத்து திட்டத்தின் நோக்கம், பரிந்துரைக்கப்பட்ட உணவுக்கான உதவித்தொகை மற்றும்  தினந்தோறும் உட்கொள்ளும் உணவு போன்றவைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நீக்குவதாகும்.  கூடுதல் ஊட்டச்சத்து திட்டத்தில் ஆயுஷ் நடவடிக்கைகளை பின்பற்றி மாறுபட்ட உணவு உட்கொள்ளும் முறை மற்றும் வேளாண்- பருவநிலைக்கு ஏற்ற பிராந்திய உணவுப் பழக்கங்களை மேம்படுத்த மத்திய  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

 இந்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இரானி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

***

SRI/GS/AG/KRS


(Release ID: 1908102)
Read this release in: Urdu , English , Telugu