பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பஞ்சாயத்துக்களுக்கு நிதி
தமிழ்நாட்டுக்கு 2019-20 முதல் ரூ.9,609 கோடி ஒதுக்கீடு
Posted On:
14 MAR 2023 4:11PM by PIB Chennai
மாநிலம் வாரியாக பஞ்சாயத்துக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவரத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-20-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டுக்கு ரூ.9,609.376 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 14 மற்றும் 15-வது நிதி ஆணையங்களில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கான நிதியாக பஞ்சாயத்துக்களுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரீய கிராம சுவராஜ் இயக்கத்தின் கீழ் மாநிலங்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியாக தமிழ்நாட்டுக்கு ரூ.127.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் திரு கபில் மொரேஷ்வர் பாட்டீல் மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
AD/PKV/KPG
(Release ID: 1906818)