உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

இந்திய விமான நிலைய ஆணையம் 25 விமான நிலையங்களை குத்தகைக்கு ஒதுக்கியுள்ளது

Posted On: 13 MAR 2023 3:12PM by PIB Chennai

தேசிய நிதிமயமாக்கல் திட்டத்தின்படி 2022-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இந்திய விமான நிலைய ஆணையம் 25 விமான நிலையங்களை குத்தகைக்கு ஒதுக்கியுள்ளது.

இவற்றில் செயல்பாடு, மேலாண்மை, நீண்டகால குத்தகை அடிப்படையில் மேம்பாட்டிற்காக தில்லி, மும்பை, அகமதாபாத், குவகாத்தி, ஜெய்ப்பூர், லக்னோ, மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய எட்டு விமான நிலையங்களை பொது, தனியார் கூட்டாண்மை மூலம் குத்தகைக்கு ஒதுக்கியுள்ளது.

இவற்றில் தில்லி, மும்பை ஆகிய விமான நிலையங்கள் 2006-ம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டன

கடந்த 5 ஆண்டுகளில் தில்லி விமான நிலையம் மூலம் சுமார் ரூ.5,500 கோடியும், மும்பை விமான நிலையம் மூலம் ரூ.5,174 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டது.  

இத்தகவலை மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜென்ரல் விகே சிங் கூறினார்.

***

AP/IR/RJ/RR



(Release ID: 1906416) Visitor Counter : 180