உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உடான் திட்டத்தின்கீழ் ஜனவரி 2023 வரை 73 விமான நிலையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன

Posted On: 13 FEB 2023 3:01PM by PIB Chennai

உள்நாட்டு விமானப் போக்குவரத்தை அதிகரிக்கவும், விமானப் பயணங்களுக்கான கட்டணங்களைக் குறைக்கும் நோக்கிலும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 21.10.2016 அன்று உடான் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சந்தைத் தேவை அடிப்படையிலான இந்தத் திட்டத்தில் விமான நிறுவனங்கள் தங்களுக்கேற்ற வழித்தடங்களை தேர்வு செய்து, ஏலத்திற்கு விண்ணப்பித்து, விமானப் போக்குவரத்தை செயல்படுத்துகின்றன.

     இந்தத் திட்டத்தின்கீழ், 31.01.2023 வரையிலான காலக்கட்டத்தில் 73 விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.  இவற்றில் 9 ஹெலிகாப்டர் தளங்களும், 2 நீர்வழி ஏரோட்ரோம்களும் அடங்கும்.  பயன்பாட்டில் இல்லாத 100 விமான நிலையங்கள், ஹெலிபேட்கள் மற்றும் நீர் ஏரோட்ரோம்களை 2024 ஆம் ஆண்டுக்குள் உடான் திட்டத்தின்கீழ், புதுப்பித்து மேம்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

     தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உடான் திட்டத்தின்கீழ், சேலம் விமான நிலையம் 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

     இந்தத் தகவலை சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் திரு வி கே சிங், மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

(Release ID: 1898741)

***

AP/PLM/UM/RR



(Release ID: 1898809) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Manipuri , Telugu