மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

Posted On: 08 FEB 2023 1:44PM by PIB Chennai

இந்திய பொருளாதாரத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை  அதிகரிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் நிதித்துறையின் தரம் மேம்பட்டு வலுப்படுத்தப்படுவதுடன்  குடிமக்களின் எளிதான வாழ்க்கைக்கும் உதவுகிறது. அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால்  டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2017-18-ம்  நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த பரிவர்த்தனைகள் 2021-22-ம் நிதியாண்டில்  8,840 கோடி பரிவர்த்தனைகளாக அதிகரித்தது.

2022-23-ம் நிதியாண்டை பொருத்தவரை டிசம்பர் 31, 2022 வரை 9,192 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்றன. 

2017-18-ம் நிதியாண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 1,962 லட்சம் கோடியாக இருந்தது.

2022-23-ம் நிதியாண்டில் டிசம்பர் 31, 2022 வரை 2,050 லட்சம் கோடி அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு இருந்துள்ளது.

இத்தகவலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

----- 

AP/IR/KPG/GK



(Release ID: 1897342) Visitor Counter : 286


Read this release in: English , Urdu , Marathi