நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி / லிக்னைட் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் சுரங்க சுற்றுலா மேம்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
02 JAN 2023 4:44PM by PIB Chennai
இயற்கை, சமூகம், காடு மற்றும் வன வாழ்வு ஆகியவற்றுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொருத்தமான சுரங்கப்பகுதிகளை சுற்றுச்சூழல் பூங்கா, தண்ணீர் விளையாட்டுக்கான இடங்கள், நிலத்தடி சுரங்க சுற்றுலா, கோல்ஃப் மைதானங்கள், சாகசங்கள், பறவைகளை கண்டுகளித்தல் போன்றவற்றை நிலக்கரி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் உள்ள வடக்கு நிலக்கரி நிறுவனம் உருவாக்கியுள்ள முத்வானி அணை சுற்றுச்சூழல் பூங்கா டோலாவில் உள்ள தென்கிழக்கு நிலக்கரி நிறுவனம் உருவாக்கியுள்ள அனன்யா வாடிகா சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பூங்காவுடன் பள்ளமான ஏரி ஆகியவை இதில் அடங்கும்.
விரிக்ஷரோபான் இயக்கம் 2021-ன் கீழ் சிங்ராலியில் முத்வானி அணை சுற்றுச்சூழல் பூங்கா ஏற்படுத்தப்பட்டது. இது இயற்கை அழகுடன் கூடிய அமைதியான இடமாகும். அழகான நீர் முகப்பு, நடைபாதை, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, உணவகங்கள், உள்ளூர் பொருட்களுக்கான கடைகள் ஆகியவை இந்தப் பூங்காவில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1888060
***
AP/IR/AG/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1888075)
வருகையாளர் எண்ணிக்கை : 221