ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வரும் 2030-ஆம் ஆண்டில் ஜவுளித்துறையின் ஏற்றுமதியை 100 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது

प्रविष्टि तिथि: 23 DEC 2022 3:19PM by PIB Chennai

வளர்ந்து வரும் உலகளாவிய சந்தை தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்திய ஜவுளித்துறையின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது  என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்ஜோஷி தெரிவித்தார்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் ஜவுளித்துறையின் ஏற்றுமதி குறித்த தகவல் :

ஜவுளி, ஆடைகள் மற்றும் கைவினைப்பொருட்களின் ஏற்றுமதி 2017-18-ல் 37.55 அமெரிக்க பில்லியன் டாலராகவும், 2022-23-ல் (ஏப்ரல் முதல் அக்டோபர், 2022) 21.15 அமெரிக்க பில்லியன் டாலராகவும் இருந்துள்ளது என்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்ஜோஷி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :

‘வரும்  2030-ஆம் ஆண்டில்  ஜவுளித்துறையின் ஏற்றுமதியை 100 பில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை  அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

**************

(Release ID: 1886022)

SG/GS/KPG/KRS


(रिलीज़ आईडी: 1886119) आगंतुक पटल : 252
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu