எஃகுத்துறை அமைச்சகம்
எஃகு உற்பத்தியில் பிளாஸ்டிக் கழிவுகளின் பயன்பாடு
Posted On:
19 DEC 2022 5:32PM by PIB Chennai
இந்திய எஃகு தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தும் வசதி உள்ளது. அதனால், பிளாஸ்டிக் கழிவுகளை கோக்கிங் நிலக்கரிக்கு மாற்றுப் பொருளாக சுமார் ஒரு சதவீதம் வரை பயன்படுத்தலாம். இதேபோல், பெட் கோக்கிற்கு மாற்றாகவும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்த முடியும். இதற்கு ஏதுவாக பிளாஸ்டிக் கழிவு விதிகளில் கடந்த 2022 ஜூலை 6-ம் தேதி திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, பிளாஸ்டிக்கின் இறுதிக்கட்ட கழிவை, எஃகு தொழிற்சாலைகளில், பதப்படுத்தும் பணிகளில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. மற்ற பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தையும் மறு சுழற்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டியது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் எஃகு உற்பத்திக்கு பிளாஸ்டிக் இறுதிக் கழிவு இன்றியமையாததாக மாறியுள்ளது.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதியின் கீழ், உள்ளாட்சி அமைப்புகளும், நகராட்சிகளும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தல், சேமித்தல், பிரித்தெடுத்தல், பதப்படுத்துதல், வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பணிகளுக்கு தனி அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய எஃகு மற்றும் கிராம வளர்ச்சித்துறை இணை அமைச்சர் திரு ஃபக்கன் சிங் குலாஸ்தே எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884847
**************
AP/ES/KPG/KRS
(Release ID: 1884928)