சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
வனவளர்ப்பை மேம்படுத்துதல்
प्रविष्टि तिथि:
19 DEC 2022 1:58PM by PIB Chennai
காடுகளின் பரப்பை அதிகரிப்பதன் மூலம் பாலைவனமாவதைத் தடுத்துநிறுத்த அரசு பல உடனடித் திட்டங்கள்/தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காடு மற்றும் மரம் வளர்த்தல் பரப்பை அதிகரிப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் பிற அமைச்சகங்களால் பல்வேறு காடு வளர்ப்பு தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பசுமை இந்தியாவுக்கான தேசிய இயக்கம் மற்றும் காட்டுத் தீயிலிருந்து பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திட்டம் போன்ற முக்கிய திட்டங்களின் கீழ் காடுகளைப் பாதுகாத்தல், மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பதற்கான மத்திய நிதியுதவி திட்டத்தின் மூலம் பல்வேறு காடு வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆதரவளிக்கிறது.
ஈடுசெய்யும் காடு வளர்ப்பு நிதி நிர்வாகம் மற்றும் திட்டமிடல் ஆணையம் மூலம் ஈடுசெய்யும் காடு வளர்ப்பு நாடு முழுவதும் காடுகளை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மாநில அரசுகளும் சீரழிந்த வனப்பகுதிகளை மீட்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884762
**************
AP/SMB/KRS
(रिलीज़ आईडी: 1884918)
आगंतुक पटल : 227