சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகள்
Posted On:
19 DEC 2022 2:01PM by PIB Chennai
இமயமலையின் பனிப்பாறைகள் பற்றிய ஆய்வு என்பது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், தரவு சேகரிப்பு மற்றும் பல்வேறு ஆய்வுகளின் பகுப்பாய்வு மூலம் ஆராயப்படுகின்ற ஒரு சிக்கலான மற்றும் வளர்ந்துவரும் விஷயமாகும். புவிக்கோள், உயிரிக்கோள் திட்டத்தின் கீழ் ஏரோசல் கண்காணிப்பு வலைப்பின்னலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் - இஸ்ரோ, இயக்குகிறது.. இந்த வலைப்பின்னலிலிருந்து அளவிடப்படும் அளவுருக்களில் ஒன்று கரியமில வாயுவின் அடர்த்தி ஆகும். இதில் கடந்த பத்தாண்டுகளில் குறைந்துவரும் போக்கு காணப்படுகிறது.
பிரதமரின் உஜ்வாலா திட்டம் தூய்மையான வீட்டு சமையல் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.
2020, ஏப்ரல் 1 முதல் எரிபொருள் மற்றும் வாகனங்களுக்கான நெறிமுறைகள் பிஎஸ் (BS) -IV இலிருந்து பிஎஸ் (BS)-VI க்குப் பாய்ச்சல் வேகம் .
பொதுப் போக்குவரத்திற்கான மெட்ரோ ரெயில் நெட்வொர்க் மேம்படுத்தப்பட்டு, மேலும் பல நகரங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன.
வாயு எரிபொருள் (சிஎன்ஜி, எல்பிஜி போன்றவை), எத்தனால் கலவை போன்ற தூய்மையான / மாற்று எரிபொருட்களின் அறிமுகம்.
மின்சார வாகனங்களின் விரைவான உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கான திட்டத்தின் 2ம் கட்டம்- வெளியீடு.
மாசுபாட்டைக் குறைக்க செங்கல் சூளைகளை வளைந்தும் நெளிந்தும் செல்லும் குழாய் மூலம் வெப்பக் காற்றை செலுத்தும் தொழில்நுட்பத்திற்கு மாற்றுதல். குழாய் மூலமான இயற்கை எரிவாயுவுக்கு தொழில்துறை பிரிவுகளை மாற்றுதல் உள்ளிட்டவை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாகும்.
இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884766
**************
AP/SMB/KRS
(Release ID: 1884830)