பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு அமைச்சகத்தின் 2022-ம் ஆண்டு செயல்பாடுகள் பற்றிய கண்ணோட்டம்

Posted On: 17 DEC 2022 10:51AM by PIB Chennai

2022-ம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கின்படி, பாதுகாப்புத் துறையில், அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கின் தலைமையில், ராணுவத்தை தற்சார்பு இந்தியா இலக்கை எட்டும் வகையில், இளமையும், நவீனத்துவமும் கொண்டதாக பல்வேறு சீர்திருத்த சாதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நவீன ஆயுதங்கள்/உபகரணங்கள்/தொழில்நுட்பங்களை தன்னம்பிக்கை கொண்ட உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, ஆயுதப் படைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ள நிலையில்எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் இளைஞர்கள், தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட  ராணுவத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.  'மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்' தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கான கூட்டு இலக்கை அடைவதற்காக, பாதுகாப்பு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகள், பல நாடுகள் இந்திய தளங்களில் அதிக ஆர்வம் காட்டியதால், பலனளித்தன.  பாதுகாப்பு ஏற்றுமதி. எல்லைப் பகுதி மேம்பாடு, மகளிர் சக்தி, தேசிய மாணவர் படையின் (என்சிசி) விரிவாக்கம், இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்க புதிய சைனிக் பள்ளிகளை அமைத்தல் ஆகியவை புதுப்பிக்கப்பட்ட உற்சாகத்தை ஏற்படுத்தின.

முக்கிய அம்சங்கள்;

அக்னிபாத்- பெரிய சீர்திருத்த மாற்றம்

 

• ஆயுதப் படைகளில் இளைஞர்களைச் சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. தேசபக்தியுள்ள இளைஞர்கள் (அக்னிவீரர்கள்) புனித சீருடையை அணிந்து நான்கு ஆண்டுகளுக்கு நாட்டிற்கு சேவை செய்ய அனுமதிக்க்கப்படுவார்கள்.

• இந்தத் திட்டம் ஆயுதப் படைகளின் இளமைத் தன்மையை செயல்படுத்தவும், மேலும் தொழில்நுட்ப ஆர்வமுள்ள இராணுவத்தை நோக்கி மாற்றத்தை ஏற்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

• கவர்ச்சிகரமான மாதாந்திர ஊதியத்தையும்அக்னிவீரர்களின் பணிக் காலம் முடிந்ததும் அவர்களுக்கு 'சேவா நிதி' தொகுப்பையும் உள்ளடக்கியது.

• இந்தத் திட்டத்திற்கு தேசபக்தியுள்ள இளைஞர்களின் ஆர்வம் ஊக்கமளிக்கிறது. ஆயுதப் படைகளில் (இந்திய ராணுவம் - 37.09 லட்சம், இந்திய கடற்படை - 9.55 லட்சம் மற்றும் இந்திய விமானப்படை - 7.69 லட்சம்)  சேருவதற்காக, பெண்கள் உட்பட, 54 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் மூன்று சேவைகளால் பெறப்பட்டுள்ளன.

 

ஐஎன்எஸ் விக்ராந்த் - 'தற்சார்பு இந்தியா' வுக்கான சிவப்பு எழுத்து தினம்

 

• இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் மாதம் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில்  பிரதமரால் தொடங்கப்பட்டது. இந்த ஆணையமானது நாட்டின் வளர்ந்து வரும் உள்நாட்டு உற்பத்தித் திறனையும், 'தற்சார்பு இந்தியா’ வை  நோக்கிய பாதையில் ஒரு முக்கிய மைல்கல் சாதனையைப் படைத்தது.

• 76% உள்நாட்டு பொருட்களுடன் உருவாக்கப்பட்ட, 262.5 மீ நீளமும் 61.6 மீ அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் அதிநவீன உபகரணங்கள்/அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன, இது சுமார் 1,600 அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கொண்ட குழுவினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்தியக் கடற்படையில், விமானப்படைக் குழு, ஏவுகணை அழிப்பு கப்பல்கள் உள்ளிட்ட இதர வசதிகளும் தொடங்கப்பட்டன. 

 

• மத்திய பட்ஜெட் 2022-23: 2022-23 பட்ஜெட்டில் பாதுகாப்பு சேவைகளின் மூலதன ஒதுக்கீட்டின் கீழ் மொத்த ஒதுக்கீடு ரூ.1.52 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. மூலதன கொள்முதல் பட்ஜெட்டில் 68% உள்நாட்டு தொழில்துறையின் தன்னிறைவை மேம்படுத்தவும் இறக்குமதி சார்ந்திருப்பதை குறைக்கவும் ஒதுக்கப்பட்டது.

 

• பாதுகாப்பு ஏற்றுமதி: அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் காரணமாக, பாதுகாப்பு ஏற்றுமதி கடந்த ஐந்து ஆண்டுகளில் 334% அதிகரித்து, 2021-22 நிதியாண்டில் ரூ.13,000 கோடியைத் தொட்டது. இந்தியா தற்போது 75 நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

 

பாதுகாப்புக் கண்காட்சி  2022:

 

 12வது மற்றும் மிகப் பெரிய பாதுகாப்பு கண்காட்சி -  'பெருமித்துக்கான பாதை' என்ற கருப்பொருளுக்கு ஏற்ப, உலக அளவில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்காக  பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 1,340 கண்காட்சியாளர்கள், வணிக நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், ஸ்டார்ட் அப்கள், எம்எஸ்எம்இ-கள், ஆயுதப்படைகள் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணையற்ற பங்கேற்பைக் கண்டனர்.

• இந்த வரலாற்று சிறப்புமிக்க கண்காட்சியின் முக்கியத்துவம், தொடக்க விழாவில் பிரதமர் கலந்து கொண்டு, 'உலகுக்கு அழைப்பு விடுத்ததாகும்.

 முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களின் அமோக வரவேற்பை இது பெற்றது.  2025 ஆம் ஆண்டுக்குள் ரூ.35,000 கோடி ஏற்றுமதியுடன் பாதுகாப்புத் துறையின் நோக்கம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 451 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்நுட்ப ஒப்பந்தங்கள், தயாரிப்பு வெளியீடுகள் மற்றும் உள்நாட்டு வணிகங்களுக்கான ஆர்டர்கள் ஆகியவை கண்காட்சியின் வெற்றியைப் பறைசாற்றுவதாக அமைந்தன.

 

பிரம்மோஸ், பிருத்வி, அக்னி போன்ற நவீன ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

 

100 புதிய சைனிக் பள்ளிகளை அமைத்தல்: அரசு சாரா நிறுவனங்கள்/தனியார்/மாநில அரசுகளுடன் இணைந்து 6ஆம் வகுப்பு முதல் தரப்படுத்தப்பட்ட முறையில் 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்கும் முயற்சிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சியின் கீழ், 18 பள்ளிகளுடன் சைனிக் பள்ளிகள் சங்கம் ஒப்பந்தம்  செய்துள்ளது. இன்றைய நிலவரப்படி, இந்த 18 பள்ளிகளில் 17 பள்ளிகளில் மொத்தம் 1,048 (912 சிறுவர்கள் மற்றும் 136 பெண்கள்) மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த 17 பள்ளிகளில் 2022-23 ஆம் ஆண்டு கல்வி அமர்வு தொடங்கியுள்ளது.

 

பெண் குழந்தை சேர்க்கை: 2018-19 மற்றும் 2019-20 கல்வியாண்டில் சிங்கிப்பில் தொடங்கப்பட்ட சைனிக் பள்ளி முன்னோடித் திட்டத்தின் வெற்றிக்குப் பிறகு, ஆந்திராஉத்தராகண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பள்ளியும், கர்நாடகத்தில் இரண்டு பள்ளிகளுமாக, மேலும் ஐந்து சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளைச் சேர்க்க அரசு முடிவு செய்தது.  இன்றைய நிலவரப்படி, இந்தப் பள்ளிகளில் 698 மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் நுழைவதற்கான முதல் படியாக இந்த நடவடிக்கையைக் காண முடியும்.

 

**************

AP/PKV/DL



(Release ID: 1884372) Visitor Counter : 438


Read this release in: Malayalam , English , Hindi , Marathi