தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த ஆண்டு கண்ணோட்டம்

2022ம் ஆண்டில் 5ஜி சேவைகளை பிரதமர் தொடங்கிவைத்தார்
பாரத் நெட் திட்டத்தின் மூலம் 1லட்சத்து 90 ஆயிரம் கிராம ஊராட்சிகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

Posted On: 16 DEC 2022 1:55PM by PIB Chennai

தொலைத் தொடர்புத் துறை 2022ம் ஆண்டில் பல்வேறு சாதனைகளை எட்டியுள்ளது. இத்துறையில் இந்த ஆண்டு  மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய  செயல்பாடுகள் மற்றும்  எட்டப்பட்ட  சாதனைகளில் சில:

  • 5ஜி சேவை அக்டோபர் 1ம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது.
  • 5ஜி ஏல நடைமுறைகள் ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில் ஒரே ஏலத்தில் மிக அதிக வருவாய் ஈட்டபட்டது.
  • 5ஜி சேவைகளை நடைமுறைபடுத்தும் போது, குறிப்பிட்ட தேவைகளுக்கேற்ப அதை பயன்படுத்துவதை கருத்தில் கொண்டு  5இடங்களில் 5ஜி அலைவரிசை சோதனை கலம்  அமைக்கப்பட்டு, பரிசோதித்து பார்க்கப்பட்டது. முன்னதாக மே 17ம் தேதி 5ஜி சோதனை கலத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாட்டில் உள்ள மொத்த கைப்பேசி இணைப்புகளின் எண்ணிக்கை 114 கோடியே 40 லட்சமாக அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டில் 84 கோடியே 67 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 75.23 சதவீதம் அதிகரித்துள்ளது.  

 

  • 2014ம் ஆண்டில் நாட்டில் 25 கோடியே 15 லட்சமாக இருந்த இணையதள இணைப்பு ஜூன் 2022-ல் 83 கோடியே 69 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 232 சதவீத வளர்ச்சியாகும்.
  • 2014ம் ஆண்டில் 6 கோடியாக இருந்த பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை 2022 செப்டம்பர் மாதத்தில் 81 கோடியே 62 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 1238 சதவீத வளர்ச்சியாகும்.
  • 09.12.2022 நிலவரப்படி நாட்டில் மொபைல் சிக்னல்  பரிமாற்ற நிலையங்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 98 ஆயிரமாக உள்ளது.
  • 09.12.2022 நிலவரப்படி நாட்டில் உள்ள மொபைல் போன் கோபுரங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 40 ஆயிரமாக உள்ளது.
  • தொலைத் தொடர்புத்துறையில் 2021-22ம் நிதியாண்டில் நேரடி அந்நிய முதலீடு 668 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இது 694 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  •  பிஎஸ்என்எல் நிறுவனத்தை குத்தகையிடவும் அதனுடன் பிபிஎல் நிறுவனத்தை இணைக்கவும் 1 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பாரத் நெட் திட்டத்தின் மூலம் 2022 அக்டோபர்  31ம் தேதி வரை ஒரு லட்சத்து 90 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 6 லட்சம் கிலோ மீட்டருக்கும் கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்கள் கண்டறியப்பட்டு தொலைத் தொடர்பு  கோபுரங்கள் உள்ளிட்ட தொலைத் தொடர்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இமாச்சலப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், குஜராத், உத்ரகாண்ட், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொபைல் போன் சேவைகளே இல்லாத 354 கிராமங்கள் கண்டறியப்பட்டு அதில் 2022 அக்டோபர் வரை 275 கிராமங்களுக்கு தொலைத் தொடர்பு கோபுரங்களுடன் சேவைகள் வழங்கப்பட்டுள்ன.

 

  • அசாம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம்,  அருணாச்சலப்பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தொலைத் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்த விரிவான  தொலைத்தொடர்பு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் மொபைல் போன்  மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  
  • பொது இடங்களில் வைஃபை வசதியை ஏற்படுத்த தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுத்தப்படும் பிரதமரின் வாணி திட்டத்தின் கீழ் 22.9.2022 வரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 66 வைஃபை சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தொலைத் தொடர்புத் துறையில் மிக முக்கிய வளர்ச்சியாக 5ஜி சேவைகள் பிரதமர் திரு நரேந்திர மோடியால் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தேச வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக திகழும் இந்த சேவை, கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற பல துறைகளில் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1884072

**************

SM/PLM/RS/KRS



(Release ID: 1884172) Visitor Counter : 206