பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு முக அங்கீகாரம் தொழில்நுட்பம் மூலம் கடந்த ஆண்டு 72,338 வாழ்நாள் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 6,2022 வரை 3 லட்சம் வாழ்நாள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

Posted On: 14 DEC 2022 12:59PM by PIB Chennai

மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு முக அங்கீகாரம் தொழில்நுட்பம் மூலம் கடந்த ஆண்டு 72,338 வாழ்நாள் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 6,2022 வரை 3 லட்சம் வாழ்நாள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது மக்கள் குறை தீர்ப்பு,  ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

 மக்களவையில் இது குறித்த கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ் வழங்குவதற்காக முக அங்கீகார தொழில்நுட்பம் கடந்த நவம்பர் 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார்.

அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.  எனினும் முக அங்கீகாரம் மூலமான சான்றிதழ் கட்டாயமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க  இந்திய தபால் மற்றும் நிதி வங்கி ஓய்வூதியதாரர்களின்  வீடுகளுக்கே சென்று சேவை அளிப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். 

**************

AP/IR/AG/KPG


(Release ID: 1883403)
Read this release in: English , Urdu , Telugu , Malayalam