சுரங்கங்கள் அமைச்சகம்
இரும்பு தாது உற்பத்தி
Posted On:
14 DEC 2022 12:55PM by PIB Chennai
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957, திருத்தப்பட்டு 12.01.2015 முதல் அமுலுக்கு வந்தது.இந்த திருத்தத்தின் மூலம், அந்தந்த மாநில அரசுகள் ஏலம் விடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திருத்தத்தின் காரணமாக நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி அதிகரித்துள்ளது. 2014-15ம் ஆண்டில் 88.97 மில்லியன் டன்னிலிருந்து, 2021-22ல் 120.29 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது ஆண்டுக்கு 4.4 சதவீதம் அதிகமாகும்.
மக்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி இதனை தெரிவித்துள்ளார்.
**************
AP/PKV/RS/RR
(Release ID: 1883399)