கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் வழங்க இந்தியாவின் 102 கலைஞர்களை சங்கீத நாடக அகாடமி தெரிவுசெய்துள்ளது

प्रविष्टि तिथि: 25 NOV 2022 6:23PM by PIB Chennai

புதுதில்லியில் நவம்பர் 6 முதல் 8 வரை நடைபெற்ற, இசை, நடனம், நாடகம் ஆகியவற்றுக்கான தேசிய அகாடமியான சங்கீத நாடக அகாடமியின் பொதுச்சபை கூட்டத்தின்போது, நிகழ்த்துக் கலைகளில் சிறந்து விளங்கும் இந்தியாவின் 102 கலைஞர்கள், 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் (3 இணையான விருதுகள் உட்பட) வழங்க தெரிவுசெய்யப்பட்டனர்.

உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் என்பது 40 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. வாய்ப்பாட்டு (இந்துஸ்தானி மற்றும் கர்நாடிக்), புல்லாங்குழல், சித்தார், மிருதங்கம் மற்றும் இதர பாரம்பரிய இசைக்கருவிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருது ரூ.25,000 ரொக்கப் பரிசைக் கொண்டது. சங்கீத நாடக அகாடமியின் தலைவரால் சிறப்பு விழா ஒன்றில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

விருது பெறுவோரின் விவரங்களை இந்த இணையதளத்தில் காணலாம்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/nov/doc20221125136601.pdf

                              **************                          

(Release ID: 1878899)
AP/SMB/KG/KRS


(रिलीज़ आईडी: 1878948) आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi