குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகை டிசம்பர் 1-ம் தேதி முதல் வாரத்தின் 5 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்

Posted On: 21 NOV 2022 7:08PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகை டிசம்பர் 1, 2022 முதல் வாரத்தின் 5 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும். புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (கெசட்டில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்கள் தவிர) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒவ்வொரு மணி நேரமும் பார்வையிட  அனுமதிக்கப்படும்.

குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகத்தை செவ்வாய் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கெசட்டில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்கள் தவிர) 6 நாட்கள் வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் படை வீரர்கள் மாற்றுதல் நிகழ்ச்சியைக் காணவும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கெசட்டில் வெளியிடப்பட்ட விடுமுறை நாட்களில் அந்த சனிக்கிழமை இடம் பெற்றிருந்தால் இந்நிகழ்ச்சி நடைபெறாது.

பார்வையாளர்கள் தங்களது வருகையை http://rashtrapatisachivalaya.gov.in/rbtour  என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

************** 


(Release ID: 1877782)



(Release ID: 1877821) Visitor Counter : 134