இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

புதுதில்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இல்லம் தோறும் தேசியக் கொடி ஏற்றும் இயக்கத்திற்கான இருசக்கர வாகன பேரணியி்ல் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் பங்கேற்றார்

Posted On: 03 AUG 2022 4:47PM by PIB Chennai

இல்லம் தோறும் தேசியக் கொடி ஏற்றும் இயக்கத்தின் சார்பில் புதுதில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற செங்கோட்டை முதல் இந்தியா கேட் வரையிலான இருசக்கர வான பேரணியை குடியரசு துணைத்தலைவர்  இன்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்  திரு அனுராக் சிங் தாக்கூர்  ஆர்வமுடன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் சென்று வலிமையான நாடாக மாற்ற வேண்டும் என்பதை வருங்கால தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில், பல்வேறு துறை மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைய தலைவர்கள் இந்த இருசக்கர வாகனப் பேரணியில் ஒன்றாக பங்கேற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

சக்திமிகு மூவர்ணக்கொடி 130 கோடி இந்தியர்களை  ஒருங்கிணைப்பதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1847918

***************



(Release ID: 1848040) Visitor Counter : 156