குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சமூக சேவைக்காக நேரத்தை அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் அழைப்பு

Posted On: 01 AUG 2022 5:35PM by PIB Chennai

சமூக சேவைக்காக நேரத்தை அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம்.வெங்கய்யா நாயுடு அழைப்புவிடுத்துள்ளார். தேவை உடையவர்களுக்கு செய்யும் உதவியால் ஏற்படும் திருப்பதியும், மகிழச்சியும் வேறு எதுவும் அளிப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

புதுதில்லியில், தன்னார்வ தொண்டு நிறுவன மையத்திற்கான தேசிய சேவை மைய கட்டடத்தை திரு வெங்கய்யா நாயுடு திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், சமுதாயத்தின் தேவையை நிறைவேற்றுவதில் அனைவரும் பங்களிப்பு செய்யவேண்டும் என்று கூறினார்.

ஊரகப் பகுதிகளில் சேவை சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலம்இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று திரு வெங்கய்யா நாயுடு கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1847040

------



(Release ID: 1847113) Visitor Counter : 175