எரிசக்தி அமைச்சகம்
இஇஎஸ்எல் இந்தியா முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் 1.25 கோடி எல்இடி தெரு விளக்குகளை நிறுவியுள்ளது
प्रविष्टि तिथि:
19 JUL 2022 5:37PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி தேசிய எல்இடி விளக்குகள் திட்டத்தை 2015 ஜனவரி 5 அன்று தொடங்கி வைத்தார், இதன் கீழ் தெரு விளக்கு தேசிய திட்டம் வழக்கமான தெரு விளக்குகளுக்குப் பதிலாக ஆற்றல் திறன் கொண்ட எல்இடி தெரு விளக்குகள் உருவாக்கப்பட்டன.
இன்றுவரை, எரிசக்தி திறன் சேவை நிறுவனம் இஇஎஸ்எல் இந்தியா முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் 1.25 கோடிக்கும் அதிகமான எல்இடி தெரு விளக்குகளை நிறுவியுள்ளது.
இஇஎஸ்எல் உடன் அமலாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநிலங்கள்/நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இது செயல்படுத்தப்படுகிறது. தற்போது, இஇஎஸ்எல் 23 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் தெரு விளக்கு தேசிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு முன்மொழிவுகளை அது வழங்கியுள்ளது, மேலும் அந்தந்த மாநிலம்/யூனியன் பிரதேச நிர்வாகம் அதை ஏற்றுக்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்போது, தெரு விளக்குகளை மாற்றுவது மேற்கொள்ளப்படும்.
தற்போது 1,615 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன், எஸ்எல்என்பி- யின் கீழ் வழக்கமான தெரு விளக்குகளை எல்இடி தெரு விளக்குகளாக மாற்றுவதற்கு இஇஎஸ்எல் உடன் ஒப்பந்தம் செய்துள்ளன.
எஸ்எல்என்பி இதுவரை 8.5 பில்லியன் யூனிட்களை ஆண்டுக்கு ரூ.6800 கோடிக்கு சமமாக சேமிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு ஆர்.கே சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***************
(Release ID: 1842736
(रिलीज़ आईडी: 1842832)
आगंतुक पटल : 228