நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

நடப்பாண்டு (2022-23) ரபி பருவத்தில் கடந்த 03.07.2022 வரை 187.89 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

Posted On: 04 JUL 2022 4:39PM by PIB Chennai

நடப்பாண்டு (2022-23) ரபி பருவத்தில் கோதுமை கொள்முதல்  சுமூகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 03.07.2022 வரை 187.89 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 17 லட்சத்து 85 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். குறைந்தபட்ச ஆதார விலையாக அவர்களுக்கு 37,859.34 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22 ஆண்டின் கரீஃப் பருவத்தில் கடந்த  03.07.2022 வரை 755.83 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கும், ரபி பருவத்தில் 107.67 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 125.93 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். குறைந்த பட்ச ஆதார விலையாக அவர்களுக்கு 1,69,246.49 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1839125

 

 

***************



(Release ID: 1839152) Visitor Counter : 124


Read this release in: English , Urdu , Hindi