குடியரசுத் தலைவர் செயலகம்

அகில இந்திய ஆயுர்வேத மகாசம்மேளனத்தின் 59வது மகா ஆதிவேஷனைத் தொடங்கிவைத்து, உஜ்ஜைன்-இல் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டிடத்தையும் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

Posted On: 29 MAY 2022 4:41PM by PIB Chennai

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன்-இல் அகில இந்திய ஆயுர்வேத மகாசம்மேளனத்தின்  59வது மகா ஆதிவேஷனைத் தொடங்கி வைத்த, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் உஜ்ஜைன்-இல் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

அங்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர், பல மருத்துவ முறைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்ற போதிலும், ஆயுர்வேதம் அவற்றிலிருந்து வேறுபட்டது எனத் தெரிவித்தார். ஆயுர்வேதத்தின் பொருள் - வாழ்க்கை அறிவியல். 'பதி' என்ற சொல் உலகில் நடைமுறையில் உள்ள பல மருத்துவ முறைகளுடன் தொடர்புடையது. இது ஒரு நோய் ஏற்படும் போது சிகிச்சை முறையைக் குறிக்கிறது. ஆனால் ஆயுர்வேதத்தில், சுகாதாரத்துடன், நோய் தடுப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஆயுர்வேதத்தின் பாரம்பரிய அறிவை நாம் பெற்றிருப்பது நமது பாக்கியம் என அவர் தெரிவித்தார். ஆயுர்வேத அறிவை இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு, அறிவியல் சோதனையில் தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப தொழில்நுட்ப அளவுருக்களை மாற்றியமைக்க வேண்டிய நேரம் இது என அவர் கூறினார்.

 இந்திய மருத்துவ முறைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக இந்திய அரசு அவ்வப்போது பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் கூறினார். இருப்பினும், 2014 ஆம் ஆண்டில் ஆயுஷ் தனி அமைச்சகம் நிறுவப்பட்ட பிறகு, இந்த பணி இன்னும் வேகம் பெற்றது. இந்திய அரசாங்கத்துடன் தொடர்புடைய பல்வேறு ஆராய்ச்சி கவுன்சில்களால் ஆயுர்வேத துறையில் குறிப்பிடத்தக்க பணிகள் செய்யப்பட்டுள்ளன.

நமது உணவு, வாழ்க்கை முறை மற்றும் நமது அன்றாட வழக்கத்தைப்பொறுத்து  நமது உடல்நிலை உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். நமது தினசரி வழக்கம் என்னவாக இருக்க வேண்டும், பருவகால வழக்கம் என்னவாக இருக்க வேண்டும், மருந்துக்கு முன் நமது உணவுமுறை எப்படி இருக்க வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் விளக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

ஆயுர்வேதத்தின் நிர்வாகம், ஆராய்ச்சி மற்றும் கல்வியுடன் தொடர்புடையவர்கள் இங்கு ஒரே இடத்தில் கூடியுள்ளனர், எனவே, ஆயுர்வேதம் பற்றிய கொள்கை கட்டுப்பாடுகளை அகற்றி, பொது மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஆயுர்வேத ஆசிரியர்கள், மக்களுக்கு மலிவு விலையில் சிகிச்சை அளிக்கக்கூடிய தரமான கல்வி மூலம் தகுதியான மருத்துவர்களை உருவாக்குவார்கள்; மற்றும் நோய்களுக்கான சிகிச்சை மற்றும் தொற்றுநோய்க்கான புதிய பகுதிகளில் ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல் மற்றும் சரிபார்ப்பு மூலம் ஆயுர்வேதத்தின் அணுகல், செயல்திறன் மற்றும் பிரபலத்தை ஆராய்ச்சியாளர்கள் அதிகரிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.

***************



(Release ID: 1829226) Visitor Counter : 171