கலாசாரத்துறை அமைச்சகம்
சர்வதேச அருங்காட்சியக தினம் மே 16 முதல் 20 ஆம் தேதி வரை புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கொண்டாடப்படவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2022 12:57PM by PIB Chennai
சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி, தேசிய அருங்காட்சியகம் ஐந்து நாட்களில் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
துவாரகாவைச் சேர்ந்த கலாச்சார ஆதாரங்கள் மற்றும் பயிற்சிக்கான மையத்துடன் இணைந்து ஆசிரியர்களின் பயிற்சிப் பட்டறை, தில்லியில் உள்ள மாதா சுந்தரி கல்லூரி ஆகியவை இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. தில்லி முழுவதும் உள்ள பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு அருங்காட்சியகங்கள் பங்கேற்கும் ஒரு நாள் அருங்காட்சியகக் கல்வியாளர்கள் கூட்டம் இதன் பகுதியாக நடைபெறும். இது வாய்ப்புகள், சவால்கள் மற்றும் தீர்வுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் அரசாங்க அருங்காட்சியகக் கல்வியாளர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் முயற்சியாகும்.
தேசிய அருங்காட்சியகம் மே 18, 19 மற்றும் 20 ஆம் தேதிகளில், அதாவது காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும். இதை கருத்தில் கொண்டு, அருங்காட்சியகம் காப்பாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தலைமையில் கேலரி நடைகளை வடிவமைத்துள்ளது, குழந்தைகளுக்கான செயல்பாடுகள் மற்றும் வாக்-இன் பார்வையாளர்களுக்கான செயல்பாட்டு கவுண்டர்கள், இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. பல்வேறு அரசு சாரா அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழந்தைகளுக்கான பிரத்யேக நடைகள் மற்றும் செயல்பாடுகளை ஏற்பாடு செய்தல்.
தினமும் மாலை தேசிய அருங்காட்சியக அரங்கில் சிறப்பு நேரடி நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைத்து நிகழ்ச்சிகளும் தினமும் இரவு 7:00 மணிக்கு தொடங்கும். மே 18 ஆம் தேதி சாதோ இசைக்குழு சூஃபி இசை நிகழ்ச்சியை நிகழ்த்துகிறது.
மே 19 ஆம் தேதி சுதா ஜெகநாத் மற்றும் அவரது பிருஹனயிகா நாத்ரியசுரபேயின் பரதநாட்டியம் நடைபெறும்.
சுதயா நடன அறக்கட்டளையைச் சேர்ந்த ஷகுன் புட்டானி மற்றும் அவரது குழுவினர் அபிசார் நடனத்தை வழங்குவார்கள்,
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1825494
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1825514)
வருகையாளர் எண்ணிக்கை : 250