பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏர் மார்ஷல் சஞ்ஜீவ் கபூர், தலைமை இயக்குனர் (ஆய்வு மற்றும் பாதுகாப்பு) பொறுப்பை ஏற்றுக் கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAY 2022 3:36PM by PIB Chennai

புதுதில்லி விமானப்படை தலைமையகத்தில், ஏர் மார்ஷல் சஞ்ஜீவ் கபூர், தலைமை இயக்குனர் (ஆய்வு மற்றும் பாதுகாப்பு) பொறுப்பை 2022 மே 1-ந் தேதி ஏற்றுக் கொண்டார்.

ஏர் மார்ஷல் சஞ்ஜீவ் கபூர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்று 1985-ம் ஆண்டு போக்குவரத்து விமானியாக இந்திய விமானப்படையில் சேர்ந்தார். வெலிங்டன் பாதுகாப்பு சேவை கல்லூரி, பாதுகாப்பு மேலாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார்.

36 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிந்துள்ள ஏர்மார்ஷல் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இவர் வாயு சேனா மற்றும் அதிவிசிஷ்ட் சேவா பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822944

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1822952) வருகையாளர் எண்ணிக்கை : 287
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी