கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

சாகர்மாலா திட்டங்களை ஆய்வு செய்வதற்காக மே 6 ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய சாகர்மாலா உயர் குழு கூட்டத்திற்கு திரு சர்பானந்தா சோனோவால் தலைமை தாங்குகிறார்

Posted On: 04 MAY 2022 3:05PM by PIB Chennai

புதுதில்லியில்  சாகர்மாலா திட்டங்களை ஆய்வு செய்வதற்காக மே 6 ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய சாகர்மாலா உயர் குழு கூட்டத்திற்கு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர்
 திரு சர்பானந்தா சோனோவால் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர்  திரு நிதின்கட்கரி, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

 இக்குழு சாகர்மாலா திட்டத்தை ஆய்வு செய்வதுடன்,  துறைமுகத்துடன் இணைந்த சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இணைப்புத் திட்டத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யவுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் மொத்தம் உள்ள 802 திட்டங்களில் 99,281 கோடி ரூபாய் மதிப்பிலான 202 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக 7500 கி.மீ. தொலைவிலான கடற்பகுதி மற்றும் 14,500 கி.மீ. தொலைவிலான நீர்வளப்பாதையை பயன்படுத்தும் வகையில் சாகர்மாலா என்ற தேசிய அளவிலான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822593

***************



(Release ID: 1822727) Visitor Counter : 138