பாதுகாப்பு அமைச்சகம்

வாஷிங்டனில் ஏப்ரல் 11 அன்று நடைபெறவுள்ள இந்தியா-அமெரிக்கா அமைச்சர்களிடையேயான பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்

Posted On: 08 APR 2022 5:35PM by PIB Chennai

2022 ஏப்ரல் 11 முதல் 14 வரை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார். வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கருடன் இணைந்து, வாஷிங்டன் டிசியில் ஏப்ரல் 11, 2022 அன்று நடைபெறவுள்ள 4-வது இந்தியா-அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு அமைச்சர் கலந்து கொள்கிறார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் திரு லாயிட் ஆஸ்டின் ஆகியோர் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்து அதை முன்னோக்கி எடுத்து செல்வதற்கான வழிகளை ஆராய்வது பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு லாயிட் ஆஸ்டினை பென்டகனில் சந்திக்கவுள்ள திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் ராணுவங்களுக்கு இடையேயான ஈடுபாடுகள் மூலம் திறன் மேம்பாடு உள்ளிட்ட பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார்.

தமது வாஷிங்டன் டிசி பயணத்திற்கு பிறகு ஹவாயில் உள்ள அமெரிக்க இந்தோ-பசிபிக் கமாண்ட் தலைமையகத்தையும் பாதுகாப்பு அமைச்சர் பார்வையிட உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814900  

***************



(Release ID: 1815027) Visitor Counter : 143


Read this release in: English , Urdu , Hindi , Telugu