சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
நெடுஞ்சாலைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை
Posted On:
06 APR 2022 3:14PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, நகர்ப்புறங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நடைபாதை வசதி செய்து கொடுப்பதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் சாலையை கடப்பதற்கும், இந்த நெறிமுறைகள் வகை செய்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளை கடக்கும் போது ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1814160)