தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம்

Posted On: 04 APR 2022 3:33PM by PIB Chennai

ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம் 1995-ல் சில திருத்தங்களை மத்திய அரசு 2014-ல் மேற்கொண்டது. ஆனால் இந்த திருத்தங்களை கேரள உயர்நீதிமன்றம் 12.10.2018 அன்று வெளியிட்ட தீர்ப்பில் நிராகரித்து விட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திரு.ராமேஷ்வர் தெலி கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த அவர், இந்த வழக்கையும் இதனுடன் தொடர்புடைய பிற வழக்குகளையும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற 24.08.2021 அன்று பிறப்பித்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813167

***************



(Release ID: 1813270) Visitor Counter : 204


Read this release in: English , Urdu , Bengali