சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

புதிய இலக்கு திட்டம்

Posted On: 31 MAR 2022 4:15PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

நயி மன்சில் என்ற புதிய இலக்கு திட்டத்தின் கீழ் கடந்த 2020-21ம் நிதியாண்டில் 1965 பேர் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர். இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 93,485 பேர் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர்.

2020-21ம் ஆண்டில் சிறுபான்மையினத்தை சேர்ந்த 834 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டுகளில் பயிற்சி பெற்றவர்கள் உட்பட மொத்தம் 2059 பெண்கள் 2020-21ம் நிதியாண்டில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இத்திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 39,635 பெண்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர்.

                                                                                                *****************************



(Release ID: 1812145) Visitor Counter : 142


Read this release in: English , Urdu