சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செய்திக் குறிப்பு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAR 2022 4:39PM by PIB Chennai

இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 217 உட்பிரிவு (1) மற்றும் பிரிவு 222 உட்பிரிவு (1)  அளித்துள்ள அதிகாரத்தின்படி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர் உயர்நீதி மன்றங்களுக்கு நீதிபதிகளை நியமித்துள்ளார்.

இதன்படி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர் நிடுமோலு மாலா, வழக்கறிஞர் எஸ்.சௌந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் இவர்கள் பதவியேற்கும் நாளிலிருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை (நியமனங்கள் பிரிவு) செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1809303) வருகையாளர் எண்ணிக்கை : 222
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी