சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பிரதமரின் கதி சக்தி-தேசிய மாபெரும் செயல்திட்டத்தின் கீழ் சாலை வசதிகள்

Posted On: 24 MAR 2022 12:36PM by PIB Chennai

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலைப்  போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

நாட்டின் பல்வேறு பொருளாதார மண்டலங்களுக்குப்  பன்முக இணைப்பு உள்கட்டமைப்பை வழங்குவதற்கான பிரதமரின் கதி சக்தி-தேசிய மாபெரும் செயல்திட்டத்திற்கு 2021 அக்டோபரில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.

பிரதமரின் கதி சக்தி-தேசிய மாபெரும் செயல்திட்டமானது பொருளாதார மண்டலங்கள் மற்றும் அவற்றை ஆதரிக்கத்  தேவையான உள்கட்டமைப்பு இணைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் அனைத்து பல்முனை இணைப்பு திட்டங்களையும் முழுமையாக ஒருங்கிணைத்து, மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் தடையற்ற போக்குவரத்தில் உள்ள இடைவெளிகளை அகற்றும்.

2022-23-ம் ஆண்டிற்குள் தேசிய நெடுஞ்சாலைகளை 2,00,000 கிமீ ஆக அதிகரிக்க சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநிலத்  தலைநகரங்களையும் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கத்  திட்டமிடப்பட்டுள்ளது.

சரக்குப்  போக்குவரத்துத்  துறையை மிகவும் திறமையானதாகவும், தடையற்றதாகவும், ஒருங்கிணைந்ததாகவும் மாற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்துடன் சரக்குப்  போக்குவரத்துத்  திறன் வளர்த்தல் திட்டம் என்ற பெயரில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809057

 

*******



(Release ID: 1809237) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Bengali , Manipuri