பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி

Posted On: 21 MAR 2022 2:42PM by PIB Chennai

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பாதுகாப்புத் துறை  இணை அமைச்சர் திரு அஜய் பட் கீழ்காணும் விவரங்களை வழங்கினார்.

பாதுகாப்புத்  தளவாடங்கள் ஏற்றுமதிகளை ஊக்குவிக்கவும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதை மேம்படுத்தவும் சமீபகாலங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள்/நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

ஆயுதங்கள் ஏற்றுமதிக்கான நிலையான செயல்பாட்டு வழிகாட்டு முறைகள்  எளிமைப்படுத்தப்பட்டு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஏற்றுமதி ஒப்புதல் அனுமதியை செயல்படுத்துவதற்கான முழுமையான ஆன்லைன் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தளத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்டு ஒப்புதலும் விரைவாக டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகின்றன. கண்காட்சிகளில் காட்சிப்படுத்துவதற்கான பொருட்களின் ஏற்றுமதிக்கு பங்குதாரர்கள் உடனான ஆலோசனை தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது (குறிப்பிட்ட நாடுகளைத் தவிர).

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக்  கழகம் (டிஆர்டிஓ) மற்றும் பாதுகாப்புத்  தளவாடங்கள் உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராய்வதற்கும் சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகளில் பங்கு பெறுவதற்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்றுமதி தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக பாதுகாப்புத்  தளவாடங்கள் உற்பத்தித்  துறையில் தனிப்  பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்  தளவாடங்கள் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக நட்பு நாடுகளுடன் வலையரங்குகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807608

                           ***********************

 


(Release ID: 1807835)
Read this release in: English , Urdu