பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை பழங்குடியினர் நல அமைச்சகம் நடத்தியது

Posted On: 09 MAR 2022 4:33PM by PIB Chennai

டிரைஃபெட், பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி அமைப்பு மற்றும் தேசிய பழங்குடி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் பெண்ணினத்தின் தன்னிகரில்லா உணர்வை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பழங்குடியினர் நல அமைச்சகம் கொண்டாடியது.

கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் கடந்த சில வருடங்களாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம், விடுதலையின் அமிர்த பெருவிழாவை கருத்தில் கொண்டு, பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிரைஃபெட் மகளிர் தினத்தை கொண்டாடியது.

பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் திரு. பிஷ்வேஷ்வர் டுடு, பழங்குடியினர் நல அமைச்சகத்தின் செயலாளர் திரு. அனில் குமார் ஜா, டிரைஃபெட் தலைவர் திரு .ராம்சின்ஹ் ரத்வா, கூடுதல் செயலாளர் மற்றும் டிரைஃபெட் நிர்வாக இயக்குநர் திருமிகு. ஆர். ஜெயா மற்றும் இணை செயலாளர் டாக்டர்.நாவல்ஜித் கபூர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண் கைவினைக் கலைஞர்கள் மற்றும் வன்தன் திட்ட பயனாளிகளின் வாழ்வாதார பங்களிப்பு நிகழ்ச்சியின் போது காட்சிப்படுத்தப்பட்டது. தங்களது சமூகங்களின் மாற்றத்திற்காக குறிப்பிடத்தக்க பங்களித்த 75 பழங்குடி பெண்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய திரு. பிஷ்வேஷ்வர் டுடு, "சிறந்த சமுதாயம் மற்றும் நாட்டை கட்டமைப்பதில் பெண்கள் ஆற்றும் பங்கு மற்றும் அவர்களது முயற்சிகளை கொண்டாடுவதற்கான வாய்ப்பாக சர்வதேச மகளிர் தினம் அமைந்துள்ளது," என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804413

                                                            **********************

 

 

 



(Release ID: 1804583) Visitor Counter : 172


Read this release in: English , Urdu , Hindi , Telugu