பாதுகாப்பு அமைச்சகம்

இலங்கை – இந்தியா கூட்டுகடற்படை பயிற்சி –ஸ்லைநெக்ஸ், 07-10 மார்ச் 2022

Posted On: 07 MAR 2022 4:43PM by PIB Chennai

இந்தியா- இலங்கை இடையே 9-வது கூட்டு கடற்படை பயிற்சி இன்று தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. முதல்கட்டப் பயிற்சி விசாகப்பட்டினம் துறைமுகத்தில்  இன்றும் நாளையும் நடைபெறவிருக்கிறது. அதன் பின் இரண்டாம் கட்ட பயிற்சி வங்காள விரிகுடாவில் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இலங்கை கடற்படையின், ரோந்து கப்பலான எல்எல்என்எஸ் சயூரலா, இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கிர்ச் கப்பல் ஆகியவை பயிற்சியில் இடம் பெற்றுள்ளன. முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு கடற்படை பயிற்சி திரிகோணமலையில் நடைபெற்றது.

இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே புரிந்துணர்வு, அனுபவ பகிர்வு, கடல் சார் நடவடிக்கைகள், ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இக்கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1803604

------



(Release ID: 1803699) Visitor Counter : 207


Read this release in: English , Urdu , Hindi , Malayalam