நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மத்திய அரசின் நடவடிக்கையால் பாசிப் பருப்பு விலை 3.86 சதவீதம் குறைவு

Posted On: 28 FEB 2022 6:54PM by PIB Chennai

அத்தியாவசிய உணவு  பொருட்கள் கிடைப்பதை அதிகரிப்பதையும், விலைகளை நிலைப்படுத்தவும் மத்திய அரசு பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதன் காரணமாக பாசி பருப்பு விலை நன்கு குறைந்துள்ளது. 

நுகர்வோர் விவகாரத்துறையின் புள்ளி விவரங்கள் படி, அகில இந்திய அளவில் பாசிபருப்பின் சராசரி சில்லரை விலை இன்றைய  நிலவரப்படி கிலோ ரூ.106.47.   இதன் விலை தற்போது 3.86 சதவீதம் குறைந்துள்ளது.

அத்தியாவசியப் உணவுப்  பொருட்கள் சட்டத்தின் கீழ்விலைகளைக்  கண்காணிக்கும்படியும், மில் உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இருப்புகளைத்  தெரிவிப்பதை உறுதி செய்யவும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு  மத்திய அரசு கடந்த மே மாதத்தில் அறிவுறுத்தல் வழங்கியது. 

பருப்புகளின் வரத்தை மேம்படுத்தவும், விலைகளைக்  கட்டுப்படுத்ததுவம், துவரை, உளுந்து மற்றும் பாசி பருப்பு ஆகியவற்றை   கடந்தாண்டு மே 15ம் தேதி முதல் அக்டோபர் 31ம்  தேதிவரை தடையின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்தது. இந்த உத்தரவு பின்னர் 2022 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த இறக்குமதிக்  கொள்கையால், துவரை, உளுந்து, பாசிப் பருப்பு  ஆகியவற்றின் வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது.

                                                                                                *******************



(Release ID: 1801908) Visitor Counter : 115


Read this release in: English , Urdu , Marathi , Hindi