பாதுகாப்பு அமைச்சகம்

விமானப்படை மேற்கு பிரிவு தளபதிகள் மாநாடு

Posted On: 25 FEB 2022 3:37PM by PIB Chennai

விமானப்படை மேற்கு பிரிவு தளபதிகள் மாநாடு பிப்ரவரி 24, 2022 அன்று புதுதில்லியில் உள்ள சுப்ரோடோ பூங்காவில் நடைபெற்றது. விமானப்படை மேற்கு  பிரிவின் கீழ் உள்ள அனைத்து தளங்களின் தளபதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

பிரிவின் தலைமையகத்திற்கு வருகை தந்த விமானப்படைத்  தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி. ஆர். சௌதரியை விமானப்படை மேற்கு பிரிவு தளபதி  ஏர் மார்ஷல் திரு. அமித் தேவ் வரவேற்றார். அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய விமானப்படைத் தலைமை தளபதி, செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அனைத்து தளங்கள், ஆயுத அமைப்புகள் மற்றும் வளங்களின் செயல்பாட்டுத் தயார்நிலையை உறுதிப்படுத்துமாறு தளபதிகளை அவர் அறிவுறுத்தினார்.

விபத்துக்கள் மற்றும் சம்பவங்களின் மூல காரணத்தை பகுப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அசைக்க முடியாத நேரடி மற்றும் இணைய பாதுகாப்பை எல்லா நேரங்களிலும் பராமரிப்பதுடன், பணி செயல்திறனை அதிகரிக்கத் தேவையான பராமரிப்பு நடைமுறைகளை மேம்படுத்துதல் குறித்தும் அவர் பேசினார்.

விமானப்படை மேற்கு பிரிவின் விமானப் பயணத்தின் அளவைப் பாராட்டிய அவர், பாதுகாப்பான பறக்கும் சூழலை வழங்குவதற்கான முயற்சிகளைத் தொடருமாறு அனைத்து தளபதிகளையும் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801075

                           ****************



(Release ID: 1801160) Visitor Counter : 165


Read this release in: English , Urdu , Hindi